‘மேற்குலகை நம்பி ஏமாற வேண்டாம்’

இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, மேற்குலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நம்பி ஏமாறாது, அனைத்தின மக்களும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டுமென்றார்.

ஆயுத உற்பத்திகளில் ஈடுபடும் நபர்களுக்கு, யுத்தமொன்று ஏற்படுவது அவசியமென்றும் அவ்வாறான ஆயுத உற்பத்திகளில் ஈடுபடும் மேற்குலக நாடுகளால், யுத்தங்களின்றி வாழ முடியாதென்றும், பேராயர் கூறினார்.