யாழ். சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து இதனை திறந்துவைத்தனர். இதனையடுத்து, இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமாக வருகைத் தந்த முதலாவது விமானமான எயார் இந்தியன் அல்லையன்ஸ் தரையிறங்கியுள்ளது.