வடை – தேநீர் விற்பனை அதிகரிப்பு

அத்துடன், சந்தையில், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளமையால், உணவுப் பொதியின் விலை மேலும் உயர்வடைந்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி உணவுப் பொதியின் விலை 300 ரூபாயாகவும், மீன் உணவுப் பொதியின் விலை 250 ரூபாயாகவும், முட்டை உணவுப் பொதியின் விலை 240 ரூபாயாகவும், மரக்கறி உணவுப் பொதியின் விலை 220 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், வடையும், தேநீரும் சிற்றுணவகங்களின் பிரதான விற்பனைப் பொருட்களாக மாறியுள்ளன.