வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை வந்த இந்தக் குழுவினர் ,பிற்பகல் 02.45 மணியளவில் இந்தியாவுக்குச் சொந்தமான சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்தக் குழுவை வரவேற்க இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்த நிலையில்,  பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்வை செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.