வவுனியாவில் 510 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதிவரையும் 510 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 13.09.2019 அன்றிலிருந்தே உள்ளூர் தொற்றுக்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் பருவ மழையினால் மேலும் டெங்கு நுளம்புகள் பெருக்கெடுக்கும் அபாய நிலை காணப்படுகின்றது.