சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி ருவான் குணசேகர உள்ளிட்ட குழுவினர், பேருந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, பின்னர் கொத்மலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்து, பின்னர் பொலிஸ் நிலையத்திற்குள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, பதில் பொலிஸ்மா அதிபரிடம்அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இந்தக் குழுவுடன் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மானவும் கலந்துகொண்டார்.