விதிகளை ஏற்க கூகுள் ஆயத்தம்

இந்த புதிய விதிகளை ஏற்பதற்கான கெடு நேற்றுடன் (மே 25) முடிவடைந்தது. இதனால், விதிகளை ஏற்காத நிறுவனங்களின் வலைதளங்கள் தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இந்தியாவின் சட்டமியற்றும் நடவடிக்கைகளை தாங்கள் மதிப்பதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தியாவின் சட்டங்களை மீறும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்கிய நீண்ட வரலாறு கூகுளுக்கு உண்டு எனவும் அவர் கூறினார்.