‘விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டும்’

“காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி” எனும் தொனிப்பொருளில், விவசாயத் திணைக்களம் நடத்தும் விவசாயக் கண்காட்சி, யாழ்ப்பாணம் – திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில், இன்று (17) முற்பகல் 09.30 மணியளவில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தரையாற்றிய அவர், மனிதன் இப்பொழுது விண்தொட்டிருக்கின்றான் ஆனால் மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லையென்றும் உணவு சுதந்திரமாகவிருக்கும் சமுதாயத்தால் தான் ஏனைய விடயங்கள் தொடர்பில் யோசிக்கும் சக்தியும் புத்தியும் ஏற்படுமெனவும் தெரிவித்தார்.