’அரகலய’வால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை துரிதப்படுத்தவும்

2022 மே 9 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ‘அரகலய’ போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டு நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் நட்டஈடு அலுவலகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளி அரவிந்தன் கைது

முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ. அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்கு

வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்துள்ளார் .

காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை புதன்கிழமை (27) முன்னெடுத்திருந்தனர்.

கப்பல் மோதி உடைந்து விழுந்த பாலம்; அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

சிங்கப்பூரில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு வந்த ராட்சத கப்பல் ஒன்று அமெரிக்காவில்  பாலம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

அநுர குமார பதிலளித்துப்பேசிய உரையின் தமிழாக்கம்

(Nixson Baskaran Umapathysivam)

TORONTO இல் நடந்த NPP இன் கூட்டத்தில் தமிழ் தரப்பின் 3 கேள்விகளுக்குப்பின், அநுர குமார பதிலளித்துப்பேசிய உரையின் தமிழாக்கம்

நன்றி மனோரஞ்சன்…

சமாதியில் உறுதிமொழி எடுத்த வீரப்பனின் மகள்

மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனின் சமாதியில் வீரப்பனின் மகள் வித்யா ராணி வேட்பு மனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

குறைந்த சம்பளம் 17,500 ரூபாய்

தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் விதிகளின்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியம் 12,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட குழு சம்பளத்தை 17,500 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தேசிய குறைந்தபட்ச தினக்கூலியும் 500 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியானது

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சூட்சுமமான முறையில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். ஜானாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும்.

ஏன் ரூபாயின் மதிப்பு உயர்கிறது

(ச.சேகர்)

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 329 ஆகும். இந்தப் பெறுமதி மார்ச் 22ஆம் திகதி ரூ. 298 ஆக உயர்ந்திருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடையும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.