’அரகலய’வால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை துரிதப்படுத்தவும்

கம்பஹா மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் தீக்கிரையான 42 வீடுகளில் 33 வீடுகளுக்கு இதுவரை நஷ்டஈட்டு அலுவலகம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தினால் 138 வாகனங்கள் உட்பட கம்பஹா மாவட்டத்தில் அதிகளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் மந்தகதியில் இடம்பெற்றதாக தெரிவித்த அமைச்சர், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.