‘பெரியண்ணா’வின் தாராளமனம்’

எப்பொழுதும் அக்கம்பக்கத்தினருடனும் அயல்வீட்டுக்காரர்களுடனும் அளவோடு பழகி, அனுசரித்து நடந்துகொண்டால், பலவிடயங்கள் நன்மையாகவே நடக்கும். ஆனால், ஏதாவதொன்றை அவர்கள் இலவசமாகத் தருகின்றார்கள் என்றால், எம்மிடமிருந்து அதற்கு நிகராக இன்றேல், அதற்கும் மேலாக எதிர்பார்க்கின்றார்கள் என்பதுதான் யதார்த்தமாகும்.