சொல்லிச் சொல்லி தமிழைத் திருத்த வேண்டிய துர்ப்பாக்கியம்

அரசியலமைப்பை மீறி, ஏதாவதொன்று இடம்பெறுமாயின் அதனை திருத்தவேண்டிய முழுப்பொறுப்பும் அதிகாரிகளிடமே உள்ளது. அதுமட்டுமன்றி, பிரதான சட்டமான அரசியலமைப்பைப் பின்பற்றவேண்டியது மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் அதிகாரிகளினதும் தார்மிக பொறுப்பாகும். அவ்வாறு இருக்குமாயின் தப்பித்தவறியேனும் தவறுகள் இடம்பெறாது.