திருகோணமலையில் கடல் சீற்றம்

திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள். திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளனர்.