சட்டத்தரணிகளின் அறிவின் அறம் தமது சமூகத்தின் வாழ்வை வலுவாக்குவதே

(அ. வரதராஜா பெருமாள்)( முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

சில வாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிரபலமான கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீரவு காண்பதற்கான விடயங்களில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஆர்வமுடன் செயற்படப் போகிறார்கள் என்றதொரு செய்தி வெளிவந்ததும் தமிழர்களிடையேயுள்ள அரசியற் செயற்பாட்டார்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.