(அ. ராமசாமி)

திரு. ச.ஜோசப் விஜய் தலைமையில் உருவாகியுள்ள புதிய அரசு முந்தைய அரசுகளிலிருந்து பெரிதளவு விலகிவிடப்போவதில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உணர்ச்சிகரத் தூண்டல்களைச் செய்யும் உரைகளை நம்புவார்கள்; ஏற்பார்கள் என்பது நீண்டகால நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலிருந்து விலகி விடவில்லை புதிய முதல்வர். அதற்குத் தனது நடிப்பு சார்ந்த தொழில்துறை உத்தியையும் சேர்த்துக் கொண்டு கூடுதல் உணர்ச்சிகளை உருவாக்க நினைக்கின்றார்.