அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தரமான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்திற்காகத் தனிப்பட்ட ரீதியில் செலவிடும் சுமையைக் குறைத்து, நாட்டிற்குள் தரமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
