மகாபாரதம் சீரியல் பற்றி……!

நடத்தட்டும். பாஞ்சாலி 5 வரை மணந்தது சரியே என்று சொல்லி நடத்தட்டும். குந்தி தேவி மணமாகும் முன்பே தாயானது நாம் வணங்கும் சூரிய தேவன் அருளால் என சொல்லி நடத்தட்டும்.
மாடு மேய்ப்பவன் நாடும் ஆள்வான் என சொல்லித் தரட்டும். கடவுளே கண்முன் இருந்தாலும் , பகை , பொறாமை, நில அபகரிப்பு, சூழ்ச்சி இவைகளை அவரால் தடுக்க இயலாது என்பதை சொல்லித் தரட்டும்.
ராமன் சிவனை வழிபட்டான் என சொல்லித் தரட்டும். அப்படியானால் அவன் கடவுள் அல்ல என்ற உண்மையை சொல்லித் தரட்டும். பெண்ணை மானபங்கப்படுத்திய கதை தெரியப்படும் . பெண்ணை சந்தேகிக்கும் சராசரி ஆண் என்பது தெரியட்டும்.
பகுத்தறிவு உள்ள ஆசான் இவைகளை மறைக்க இயலாது.
மாணவன் மேலும் மேலும் முட்டாள் ஆகாமல்
இந்தக் கதைகளை அறிந்து ஆராய்ந்து புறந்தள்ளுவான்.(Kanniappan Elangovan)

அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர்

42 வருடங்களுக்கு முன்னர், இதே நாளில் 11.09.1973ல் அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர் தோழர் சல்வடார் அலெண்டேயும், படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் அமெரிக்காவின், கோர முகத்தை எப்போதும் நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
42 ஆண்டுகளுக்கு முன், நடந்த அமெரிக்காவின் இந்த ஜனநாயகப் படுகொலைகள், இராணுவ அத்துமீறல்கள் ,வன்முறைக் கொலைகள், அராஜகங்கள், பொருளாதராத் தடைகள் எத்தனை எத்தனை.
அவை இன்றும் அமெரிக்காவை எதிர்க்கும் பல்வேறு நாடுகளுக்கும் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. நாம் இன்னும் படிப்பினை பெற்றவர்களாக இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்பிக் கொண்டு துணைக்கு அழைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட எம் மக்களின் விடுதலையை அவர்களுக்கூடாக வேண்டி நிற்கிறோம். இப் புத்தகத்தில் ரெகிஸ் டெப்ரேயின் அலெண்டேயின் பதவிக்காலத்தில் எடுத்த பேட்டியும், பகுதி இரண்டில் நெருக்கடியான காலகட்டத்தில் சிலிக்கு பயணம் செய்து அங்கு நடந்துவந்த அரசியல் பொருளாதார மாற்றங்களை கவனித்து வந்த பிரிட்டீஸ் பொருளாதார நிபுணர் அலெக்நோவேயின் கட்டுரையும் இடம்பெற்றள்ளது. இவைகள், சமூக மாற்றத்திற்காக போரடுகின்ற சக்திகள் எதிர் நோக்க வேண்டிய பிரச்சனைகள் -தடைக்கற்கள் ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றது.  இன்றைய காலத்தில், நமது வாசிப்பிற்கும் – புரிதல்களுக்கும் இப் புத்தகம் முக்கியமானதாக இருக்கின்றது. இதனை சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.(அசோக்)

சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு

சிரியாவில் தனது இராணுவ செயற்பாடுகளை ரஷ்யா அதிகரித்திருப்பதாக வெளியான செய்தி குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கவலையை வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் பங்கேற்பு பிரச்சினையை தீர்க்க உத வாது என்று நேட்டோ தலைவர் nஜன்ஸ் ஸ்டொ ல்ட்பேர்க் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் ரஷ்ய வெளியு றவு அமைச்சர் செர்கே லவ்ரோவை தொலைபேசி யில் தொடர்புகொண்ட அமெரிக்க இராஜhங்கச் செய லாளர் ஜோன் கெர்ரி இந்த விவகாரம் குறித்து கவ லையை வெளியிட்டுள்ளார்.

(“சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகம்

(Jothimani Sennimalai)

வரலாற்றில் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகமும் ,வீரமும் நிறைந்த சுதந்திரப் போராட்டத்திற்கு இணையான சரித்திரம் உலக வரலாற்றிலேயெ வேறெங்கும் இல்லை . அவர் குழந்தைகளைக் கூட கொடிய ஆங்கிலஅரசிடம் பணயம் வைக்க நேரிட்டது. அந்த மைசூர்புலி கடைசிவரை களத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது . அதுமட்டுல்ல தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், கட்டபொம்மன் போன்ற மாவீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார் திப்பு. வட இந்தியாவில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு தென் இந்தியா ஒரு கெட்ட கனவாக மாற திப்பு ஒரு காரணமாக இருந்தார். அதே போல நவீன இந்தியாவில் ஆயுதம் ஏந்தாத காந்தி. இந்திய சுதந்திர வரலாற்றில் இருவருக்கும் தனித்த இடமுண்டு .

(“திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகம்” தொடர்ந்து வாசிக்க…)

என்னிடமிருந்த ஒரு மூடநம்பிக்கை…

(Comrade Kumaresan Asak)

அறிவியலில் நாட்டம் உள்ளவன் நான். அதன் அடிப்படையில், பொதுவாக முன்னேற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துகொண்டிருப்பதாக நம்பி வந்திருக்கிறேன். சமூக அறிவியலிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவன் நான். அந்த அடிப்படையில் சமுதாயம் வளர்ச்சசியடைந்துகொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்து வந்திருக்கிறது, முந்தாநாள் இருந்தது போல் நேற்றைய சமுதாயம் பின்னடைந்த நிலையில் இல்லை, நேற்றைய சமுதாயத்தை விட இன்றைய சமுதாயம் மேலும் முன்னேறியிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது உண்டு.

(“என்னிடமிருந்த ஒரு மூடநம்பிக்கை…” தொடர்ந்து வாசிக்க…)

மெக்காவில் கிரைன் முறிந்து விழுந்து விபத்து 62பேர் பலி

சவுதி அரேபியாவில்  உள்ள புனித மெக்கா மசூதியில்  இன்று வெள்ளிக்கிழமை  கிரைன் முறிந்து  விழுந்து ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியானதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அதிகாரி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து உள்ளார்.  மேலும்  30 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். ஹஜ் புனித யாத்திரைக்காக அங்கு அதிகமான பேர் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 01. ஒரு இடையீடு. தராகி சிவராம்.

90 களில் பதின்மவயதில் புலி நாட்டாமை
செய்த ஊரைவிட்டு ஒடி கொழும்பு போனேன்.
சரிநிகர் அலுவலகத்தில் கவிஞர் சேரன்
உதவியலாளரால் ஒரு பின்னேரம் கொள்ளுப்பிட்டி காலி
வீதியில் சிங்கள கடையில் பிளென்ரீ குடித்தேன் தராகி
சிவராமோடு. இந்தியாவில் ல் இருந்தபோது
மும்பாய் தாண்டி தான் போகவில்லை என்று
ஆதங்கப்பட்டார். நான் குடியிருந்த ரத்மலானலயில
சிவராம் குடியிருந்ததால் அடுத்த சனிக்கிழம
அவர் வீடு போனன். அதுவொரு கனாக்காலம்
எனக்கு 16 வயசு. ராதுகா பதிப்பக ரசிய நாவல்
தமிழ் மொழிபெயர்ப்புகள வாசிச்சுட்டு
ஒரு பிசாசு மாதிரி வொட்காவும் பீரும் மணக்க
கிடைக்காத என்று அலைந்த காலம். தராக்கி
ஒரு காப்போத்தல் பிறாண்டி உடைத்தார். கேட்டார்
நமக்கு கள்ளுதானே குடிக்கலாம்னு அவையடக்கமாக
சொன்னேன். மருந்துக்கும் எனக்கு மது தந்தாரில்ல. பொரிச்ச
கார்ஜில்ஸ் சோஸேஜ் மட்டும் தந்தார். வெறியில திராணியிருந்தா
இளவரசி டயனாவைவை திராணியிருந்தா யாரும்
மடக்கலாம்ணார்.(அந்த நாட்களில ஒரு குதிரகாரன் தான் இளவரசியின் பாய்பிறண்ட்)
(“வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 01. ஒரு இடையீடு. தராகி சிவராம்.” தொடர்ந்து வாசிக்க…)

இணக்க அரசியலில் மைத்திரி – டக்ளஸ் பிணக்கு என்ன?

தேசிய அரசாங்கத்தில் நியமனம் பெற்று உள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூடகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் புத்திமதி கூறி உள்ளார். ஜனாதிபதி பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குகின்றார், இவரிடம் இருந்து பாடம் படிக்க வேண்டிய தேவை இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு உள்ளது, முன்பு அமைச்சரவை அமைச்சராக இருந்து விட்டு இப்போது இராஜாங்க அல்லது பிரதி அமைச்சர்களாக இருப்பது எப்படி? என்று அடம் பிடிப்பவர்கள் மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து படிக்க வேண்டும் என்று இவர்கள் மத்தியில் உரையாற்றியபோது ஜனாதிபதி தெரிவித்து உள்ளார்.

(“இணக்க அரசியலில் மைத்திரி – டக்ளஸ் பிணக்கு என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

சிரிய அகதிகளை ஏற்கும் உருகுவே

உருகுவேயின் தலைவர் ஜோஷ் முஹிகா பெற்றோரை இழந்த 100 சிரிய அகதி குழந்தைகளுடன் தன்னுடைய ஸொந்த வீட்டை பகிர்கிறார். கடந்த வாரம் 30 மணிநேர பயணத்தின் பின்னர் முதலாவது சிரிய அகதிகள் குழு உருகுவேயை சென்றடைந்தனர். போரை என்னால் நிறுத்த முடியாது அதன் விளைவுகளுக்கு நாடுகள் சிறிதேனும் ஈடு கொடுக்கவேண்டும் என்றார் முன்னாள் ஜனாதிபதி. “நல்ல மனசுக்காரனுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை” உலகெங்கும் உள்ள முஹிகாவின் ரஸிகர்களுக்கு சந்தோஷம். ப்ராவோ.!!

எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா?

எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா சம்பந்தன் ஐயாவுக்கும் த.தே.கூ க்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு அரசியல் புலத்தினுள் நுளைவோம். ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஜீ.ஜீ க்குப் பின் தொடக்கி வைக்கப்பட்ட அரசியல் தான் உணர்ச்சியரசியல், எதிர்ப்பரசியல் என்பன. நாம் தமிழர்கள் என்ற ஒற்றை அடிப்படைக் காரணியைக் கொண்டு நடத்தப்பட்ட அரசியல் விபச்சாரமே இவ்வரசியல்களின் மூலாதாரமாகும். இது தமிழீழப் பிரகடனத்தினூடாக புலிகள் வரை தொடர்ந்தது. புலிகளின் அழிவுடனும், பசி, துன்பம், போரின் அழிவுகளுடன் உணர்ச்சி அரசியல் நின்றுபிடிக்க முடியாது அழிய முயன்ற போதும் ஒருசிலரும், கட்சிகளும் எஞ்சியிருந்த உணர்ச்சியரசியலையும் எதிர்ப்பரசியலையும் காப்பாற்ற முயன்றனர். இதன் ஒரு வடிவம்தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுமாகும்.

(“எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா?” தொடர்ந்து வாசிக்க…)