இவ்வளவுநாட்களாக மோடி அரசு பணமதிப்பு நீக்கம் ரிசர்வ் வங்கியின் முடிவு என்று சொல்லிவந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி இது அரசின் முடிவு என்கிறது. இது நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று வெளியில் செல்வதற்கு கூட தைரியமற்ற பிரதமர் தான் 56″ நெஞ்சு பற்றி (தற்)பெருமை பேசுகிறார். கோடிக்கணக்கான மக்களை ,ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய முடிவை எவ்வித பொறுப்பும்,சிந்தனையும் இல்லாமல் மக்கள் அடையக்கூடிய இன்னல்கள்,தேசத்திற்கு ஏற்படக் கூடிய இழப்பைப் பற்றி எவ்வித அக்கறையும்,புரிதலும் இல்லாமல் சம்பந்தப்பட்ட அமைப்பை ,பொருளாதார நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவை இந்தியா மட்டுமல்ல இன்று உலகமே விமர்சிக்கிறது.
(“நாட்டிற்கு ஏற்பட்ட,ஏற்படக்கூடிய இழப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)