படையினர் வசமுள்ள கேப்பாப்புலவு கிராமத்தில், பொதுமக்களின் வீடுகள் பல அழிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் பூர்வீகக் காணிகளையும் அடையாளம் காண முடியாதவாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிரதேசமானது, பொதுமக்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளையும் பாடசாலை, கோயில், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உள்ளடங்கலாக, நான்கு கிராமங்களையும் உள்ளடக்கியிருந்தது.