உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு; மீண்டும் கவனயீர்ப்பு

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி, பிரதேச மக்கள், சனிக்கிழமை (11) முதல் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன், இந்தப் போராட்டம் கவனயீர்ப்பு போராட்டமாக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (11) முதல், உணவுத் தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடைந்தது. கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தலித் முதல்வர் ?

தமிழகத்தின் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் பெரும்பான்மை மக்களை கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஆதுரவு ops தலைமைக்குத்தான் உண்டு என்று பொன்னையா பேட்டியில் சொன்னதிலிருந்தும், சின்னையாவின் அய்யா தலித்குடிதாங்கி என்ற விருதினை பெற எப்படியெல்லாம் நயவஞ்சக நட்புவலை வீசியிருந்தார் என்பதை அறிந்ததிலிருந்தும் , தலித்துகளின் ஓட்டுகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய சக்தி என்பதை உணர்ந்த கலைஞர் அரசியல் சதுரங்கத்தில் காய்நகர்த்தி சாதித்ததிலிருந்தும்,
32 சதவீத ஓட்டு வங்கியை கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை MGR ஈர்ப்பை கொண்டு ஏமாற்றிய ஜெயாவின் அரசியல் சூதாட்டத்திலிருந்தும் , தேசிய கட்சிகளான காங்கிரஸ் , பா ஜ க தலித் சமூகத்திற்கு தூண்டில் போட்டால் மட்டுமே அரசியலில் தாக்குபிடிக்க முடியும் என பேசி வருவதிலிந்தும் பார்க்கும்போது “தலித்மக்களே முதல்வரை உருவாக்குபவர்கள்” என்பது அம்மக்களை தவிர எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தே இருக்கிறது.

(“தலித் முதல்வர் ?” தொடர்ந்து வாசிக்க…)

அல்பிரட் துரையப்பா

1982 இல் தொழிற்பயிற்சிக்காக யாழ் கட்டிட திணைக்களத்தில் சேர்ந்தேன்.அப்போது நாவாந்துறை பகுதில் ஒரு பொது நூலகம் கடும் காற்றினால் சேதமடைந்ததாக தகவல்கள் வந்தன.இதைப் பார்வையிட கட்டிட திணைக்கள ஊழியர்களுடன் நானும் போனேன்.அவர்கள் பார்வையிட நான் அங்கு நின்றவரகளுடன் உரையாடினேன்.

(“அல்பிரட் துரையப்பா” தொடர்ந்து வாசிக்க…)

பேரணிப் பிரச்சினை மோசமடைகிறது துருக்கி அமைச்சர்களை தடுத்தது நெதர்லாந்து

துருக்கியின் குடிபெயர்ந்தோர் மத்தியில் துருக்கி மேற்கொண்டுவரும் அரசியல் பிரசாரம் தொடர்பான பிரச்சினையொன்றில், றொட்டர்டாமில் துருக்கி அமைச்சர்கள் நேற்று முன்தினம் (11) பேசுவதை, நெதர்லாந்து தடுத்துள்ளது. இதனையடுத்து, எஞ்சியிருக்கும் நாஸி என நெதர்லாந்தை, துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோவான் விளித்துள்ளார். றொட்டர்டாமிலுள்ள துருக்கித் துணைத் தூதரகத்துக்குள் நுழைய, துருக்கியின் குடும்ப அமைச்சர் பாத்மா பெதுல் சயான் காயா, பொலிஸாரினால் தடைசெய்யப்பட்டமையைத் தொடர்ந்தே, ஏற்கெனவெ இருந்த பிரச்சினை, பாரிய இராஜதந்திர சம்பவமாக மாறியிருந்தது.

(“பேரணிப் பிரச்சினை மோசமடைகிறது துருக்கி அமைச்சர்களை தடுத்தது நெதர்லாந்து” தொடர்ந்து வாசிக்க…)

பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம்

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதி, கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னர் கலப்பு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருவேறு கோணங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

(“பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம்” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக, கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுக்கவிதிகளை மீறிய மாணவர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

(“மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கால அவகாசம் வழங்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

(“கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகும்?” தொடர்ந்து வாசிக்க…)

‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’

அடுத்த தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை அரசியல் நாற்காலியில் இருந்து கீழ் இறக்க செயற்படவுள்ளதாக கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்ப ட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். (“‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோம் ஷர்மிளா பெயரில் இருக்கும் அழகியல் வசீகரம்

நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியதன் மூலம் மற்றைய மாநிலங்களில் அது தவறவிட்ட செய்தியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது பிஜேபி. இந்த வெற்றி குறித்து தெரிவிக்கப்படுவது அச்சம் என்றால், மணிப்பூரின் ‘ஐரோம் ஷர்மிளா’ வெறும் தொண்ணூறு வாக்குகள் மட்டுமே வாங்கி தோல்வியைத் தழுவியிருப்பது நாடு முழுக்க ஆழ்ந்த கசப்பை உருவாக்கிவிட்டிருக்கிறது.

(“ஐரோம் ஷர்மிளா பெயரில் இருக்கும் அழகியல் வசீகரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஹேரோயின் வர்த்தகம் உச்சத்தை அடைகிறது – 15 வருட ஆக்கிரமிப்பின் எதிர் விளைவு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அமெரிக்காவில் வாழ்வதும் மடிவதும் ஒரு அழகிய கனவு என்று அமெரிக்காவின் கொத்துக்குண்டுகளிலிருந்து தப்பிய அப்பாவிகள் முகநூலில் அங்கலாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தகவல்கள் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு இப் பதினைந்து வருடங்களில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் தான். பச்சிழம் குழந்தைகளும், முதியவர்களும் கூட…

(“ஹேரோயின் வர்த்தகம் உச்சத்தை அடைகிறது – 15 வருட ஆக்கிரமிப்பின் எதிர் விளைவு” தொடர்ந்து வாசிக்க…)