சஷீந்திர ராஜபக்ஷவுக்கு கடும் சிக்கல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, வழக்கு விசாரணை செய்யப்பட்டு முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (26) ஆஜரான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.