வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 35 ஆவது ஆண்டு நினைவுகூறல் யாழ்ப்பாணம் முஸ்லிம்களால் முன்னெடுப்பு


இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் சார்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் (காஸிமி), யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ பி.எஸ்.எம்.சரபுலனாம், மக்கள் பணிமணை தலைவர் மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான் (யாகூத்தி), மௌலவி அப்துல் மலிக், யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ என்.எம்.அப்துல்லாஹ் மற்றும் யாழ் பெண்கள் அபிவிருத்தி மையத்தின் தலைவர் ஜனாபா சியானா நியாஸ் உள்ளிட்டோர் தமது கருத்துரைகளை முன்வைத்திருந்தனர்.

மேற்படி வடக்கு முஸ்லிம் மக்களின் 35 ஆவது இனச்சுத்திகரிப்பு நினைவுகூறல் ஊடக மாநாட்டில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி பதில் அதிபர் எம்.எஸ்.எப்.சப்னா, பாடசாலை ஆசிரியர்கள், மாநகரசபை உறுப்பினர் கௌரவ ஆர்.எப்.றிஸ்லா, சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மகேந்திரன் திருவரங்கன், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல்
என்.எம்.அப்துல்லாஹ்
சுயாதீன ஊடகவியலாள