ஆபத்தில் கைகொடுக்கும் தோழன்

(ச.சேகர்)

இலங்கை அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று, 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் உதவியை வழங்க அண்டை நாடான இந்தியா முன்வந்திருந்தது. இந்த கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டிருந்தமை பற்றி பரவலாக பேசப்பட்டது.