ஆரியகுளமும் தமிழ்த் தேசிய அரசியலும்

(என்.கே. அஷோக்பரன்)

யாழ்ப்பாண நகரிலுள்ள ஆரியகுளம், துப்புரவு செய்யப்பட்டு, அழகாகக்கப்பட்டு, ஒரு மகிழ்வூட்டும் திடலாக உருப்பெற்றிருக்கிறது. இதனை யாழ்ப்பாண மாநகர சபை செய்திருக்கிறது. அதுவும், தனியார் அறக்கட்டளையொன்றின் நிதி உதவியுடன் இது நடந்தேறி இருப்பதாக அறியக்கிடைக்கிறது.