இந்துத்துவத்தின் அகண்ட பாரத பொம்மலாட்டம்; நூல் பிடிக்கும் புலம்பெயர் சாகச பொம்மைகள்

(புதிய திசைகள்)
இந்திய அரசு ஈழத்தமிழர்களின் தேசியக் கோரிக்கைகள் தொடர்பாக என்ன வகையில் எல்லாம் நடந்து வருகிறது என்பது தொடர்பாக புதிய வியாக்கியானங்கள் தமிழ் மக்களுக்கு அவசியப் படும் நிலை இன்றில்லை. இந்திய அரசு மட்டுமல்ல உலகில் இருக்கும் வலிமை வாய்ந்த அரசுகள் அனைத்தும் தமது தேசத்தின் நலன் சார்ந்துதான் வெளிவிவாகார விடயங்களை அணுக வல்லன என்பது சர்வதேச அரசியலின் முதல் அரிச்சுவடி.