இனமுரண்பாட்டின் தோற்றுவாயில் சாதியம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர்-03: 

இலங்கையின் இனமுரண்பாட்டைப் புதிய தளத்துக்கு நகர்த்தியதில் கறுப்பு ஜூலை வன்முறைகளுக்கு முக்கிய பங்குண்டு. இதைச் சரிவர விளங்க, இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் போராகவும் மாறிய வரலாற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.