‘ஒரே நாடு ஒரே சட்டம்’

அதனாலென்ன என்கிறீர்களா? இலங்கையின் பல மோதல் கலவரங்களுக்குக் காரணியாக இருந்தவர் இந்த புத்த சாமி. பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாற்றப்பட்டவர். ஆறு வருஷம் சிறைத்தண்டனை பெற்றவர். அப்புறம், அரசியல் விளையாட்டில், இலங்கை அரசால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு வெளியே வந்தவர். பௌத்த மத வெறியாளர். முஸ்லிம்களுக்கு எதிராக இவர் பேசும் கருத்துகள் எல்லாம் விஷம் தோய்ந்தவை.

இலங்கை முஸ்லிம்கள் நிறைய சிக்கல்களை சந்திக்கப்போகிறார்கள் என்று கடந்த தேர்தலின்போது மிரட்டியவர் இவர். கிறிஸ்துவ தீவிரவாதம் இலங்கை அரசியலில் மிகப்பெரும் சதி செய்கிறது என்றும் துவேஷம் விதைத்தவர். இவரைத்தான் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ குழுவின் வழிகாட்டுத் தலைமையில் உட்கார வைத்திருக்கிறது கோத்தபய அரசு. கவனத்தில் குறிக்கத்தக்க தகவல் ஒன்றுண்டு.

நாட்டின் விதியை நிர்ணயிக்கபோவதாகச் சொல்லப்படும் இந்தச் சட்டத்திற்கான வழிகாட்டுக்குழுவில் 13 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் நாலைந்து முஸ்லிம்கள் பெயர்கள்கூட காணக் கிடைக்கின்றன. அதில் காணப்படாத ஒரே பெயர் தமிழ்ப்பெயர். மருந்துக்குக்கூட தமிழர்க்குப் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை இலங்கை மய்ய அரசு. விதியே விதியே தமிழச் சாதியை…….

(Rathan Chandrasekar)