கண்ணை மூடிக் கொண்ட பூனைகள்

(இல அதிரன்)

ஒரு பதவிக்கு வந்துவிட்டால், நான் சொல்வதெல்லாம் சரி; நான் செய்வது மட்டுமே முழுமை; நானே எல்லாமும் என்ற எண்ணம், ஒரு சிலரைத்தவிர ஏனையோருக்கு வந்துவிடுகிறது. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் வியாழக்கிழமை (01) கூறிய “மட்டக்களப்பின் ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது, குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது” என்ற கருத்துக்கும் இதற்கும் தொடர்புண்டு. இருந்தாலும் அது தலைகீழானது; இவருடைய இந்தக் கருத்து பெரியளவில் பேசப்படுவதாகவும் மாறியிருக்கிறது.