டிராகன் பிடியில் இலங்கை?

இலங்கையிலிருந்து வெளிவரும் காட்சிகள் போர் காலச் சூழலை நினைவூட்டுகின்றன. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் அலைமோதுகின்றனர்; கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. சென்ற வாரம், பெட்ரோல் வாங்க வரிசையில் நிற்பதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீண்ட வரிசையில் காத்திருந்ததில் 3 முதியவர்கள் உயிரிழந்தனர். பெட்ரோல் நிலையங்களில் கூட்டத்தை சமாளிக்க ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.