தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்

(சட்டத்தரணி என்.கே. அஷோக்பரன்)

2018ஆம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, தன்னிச்சையான முறையிலும் அரசமைப்புக்கு விரோதமாகவும் நாடாளுமன்றத்தைக் கலைத்தபோது, அதற்கெதிராக எழுந்த வலுவான குரலாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் குரல் இருந்தது.