தோழர் நீர்வை பொன்னையன் நினைவாக

(Maniam Shanmugam)
உலகையே கொடிய கொரோனா வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய் சூறையாடி வரும் நிலையில், இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆறு தசாப்தகால தூண்களில் ஒருவரும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் மூத்த செயற்பாட்டாளருமான தோழர் நீர்வை பொன்னையன் இன்று (மார்ச் 26, 2020) தனது 90ஆவது வயதில் இலங்கை தலைநகர் கொழும்பில் காலமாகிவிட்டார். அவருடன் எனக்கு 55 வருடகாலமாக இருந்த ஆழமான தோழமையும் நட்பும் காரணமாக அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாமல் எனது மனம் பரிதவிக்கிறது, நெஞ்சு கனக்கிறது. அதற்காகவே இந்தப் பதிவு.