மலையக தோட்டங்களை தொழிலாளர்களுக்கு வழங்குங்கள் (எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 15)

(அ. வரதராஜா பெருமாள்)

இக்கட்டுரைத் தொடரின் கடந்த பகுதியில் இலங்கையானது ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு தேயிலைத் உற்பத்தியைத் தொடருவது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமற்றது என்பது தொடர்பான பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.  மேலும் தேயிலை பெருந் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களினதும் மற்றும் பெரும்பான்மையான சிறு தேயிலைத் தோட்டக்காரர்களினதும் பரிதாபகரமான பொருளாதார நிலைமைகளும் விபரிக்கப்பட்டன. இங்கு கடந்த பகுதியின் தொடர்ச்சியாக, தேயிலை நிறைந்த மலையகத்தை மாற்றுப் பண்ட உற்பத்திகளுக்கு மாற்றுதல் பற்றியும் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழுள்ள நிலங்களை அத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு பகிர்தல் பற்றியும் இங்கு நோக்கலாம்.