‘மலையக மக்கள் முன்னணியை விட்டுக்கொடுக்க மாட்டேன்’

தனது தந்தையின் எண்ணக்கருவில் உதித்த மலையக மக்கள் முன்னணியானது, எனது கருவிலேயே விதைக்கப்பட்ட கட்சி. ஆகவே, ஒருபோதும் இதை நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். வெற்றிபெற்ற அடுத்த நிமிடம் மலையக மக்கள் முன்னணி எனது கைகளுக்கு வரும். மலையக மக்கள் முன்னணியை மீண்டும் சரியான முறையில் எனது தந்தையின் கொள்கைக்கு ஏற்றவாறு மீளக் கட்டியெழுப்புவேன்” என, மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் அமரர் பெரியசாமி சந்திரசேகரின் புதல்வியும் நுவரெலியா மாவட்டத்தில் இலக்கம் 4 கோடரிச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.