மாடுகளையும் புண்ணாக்கிய விலையுயர்வு

அரசாங்கத்தினால் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானங்களும் “மரமேறி விழுந்தவனை மா​டேறி மித்த” கதையாகத்தான் இருக்கிறது. இறுதியில் எங்கே போய் நிற்கப்​போகிறது என்பது தெரியாமலே இருக்கிறது. அடுத்த வேளைக்கு என்ன செய்வோமென நினைப்போரின் மனங்களில் கொதித்த எண்​ணெயை வார்த்தால் போல விலைவாசி அதிகரிப்புகள் ஒவ்வொரு நாளும் எகிறிக் கொண்டே போகின்றன.