மார்ச் 31: இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய நாள்


காந்தி உண்ணாவிரதம் தானே இருந்தார், தலைவன் என்பவன் தானே உண்ணாவிரதம் இருப்பான். ஆனால் வஞ்சகன் பிரபாகரன் அந்த திலீபனை அதுவும் வயிற்று காயத்தில் இருந்த திலீபனை தூண்டிவிட்டு அவன் வதைபட்டு சாகும்வரை பார்த்து அவனை நீரும் அருந்தவிடாமல் கொன்று அவன் செத்தபின் பழியினை இந்தியா மேல் சுமத்தினான்.
இந்திய அமைதிபடை புலிகளும் சிங்களனும் மோதி கொள்வதை தடுக்கவே சென்றிருந்தது, முதலில் ஈழமக்கள் இந்திய அமைதிபடையோடு நல்ல உறவிலே இருந்தனர், மோதல் எனும் சிந்தனையே இல்லை
ஆனால் அமைதி திரும்ப திரும்ப தங்களின் வரிவசூல் பாதிக்கபடும் மக்கள் தங்களை மறப்பார்கள் தங்கள் கட்டபஞ்சாயத்து எடுபடாது என விபரீதமாக சிந்தித்த புலிகள் அமைதிபடையோடு மோதினார்கள்
ஆம் சிங்களன் பிரேமதாசாவோட் சேர்ந்து மோதினார்கள்
மோதலைவிட கொடிய விஷயம் அவர்கள் கேட்ட அந்த கேள்வி “சிங்களனும் தமிழரும் அண்ணன் தம்பிகள், இதில் இந்திய நாய்களுக்கு என்ன வேலை?”
உண்மையில் ஈழ அகதிகள் இந்தியாவில் குவிந்தபின்பே அவர்கள் காவல் வேண்டித்தான் இந்தியா களமிறங்கிற்று
அதுவும் புலிகள் வடமராட்சியில் சுற்றிவளைகபட்டு ஏகபட்ட மக்கள் சாகும் நிலையில்தான் களமிறங்கிற்று
அந்த இந்தியபடை புலிகளின் தாக்குதலை எதிர்பாராமல் அதிர்ந்தது
இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை, புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.
உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.
மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும், ராணுவம் என்ன செய்யும்?
ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.
மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.
திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும், எப்படி சோதிக்க?
சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.
ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.
எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.
இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை, இன்னொன்று இந்திய ராணுவம் அழிவுகளை குறித்து கவனமாக போராடிற்று, அப்படியும் பிரபாகரனை முடக்கிய சமயத்தில்தான் விபி சிங் படை மீட்டார்.
விபி சிங் எனும் மகா பலவீனமான பிரதமருக்கு இந்த அழுத்தத்தை கொடுத்தவர் கருணாநிதி, ஆம் புலிகளை அன்று கருணாநிதிதான் காத்தார்
அவ்வகையில் ராஜிவ் கொலைக்கு முதன் முதலில் உதவியவர் அவரேதான்
இந்திய ராணுவத்தின் மேலான கொரில்லா தாக்குதலும் புலிகளின் சொந்த பயிற்சி அல்ல, இதை புலிகளுக்கு சொல்லிகொடுத்தது வேறொரு நாடு, இந்த தந்திரம் ஆப்கனில் சோவியத் படைகளை விரட்ட பயன்பட்ட தந்திரம், ஒருமாதிரி மக்களோடு மக்களாக ராணுவத்தை குழப்பி அடிக்கும் தந்திரம்
சோவியத் இதில்தான் ஆப்கனில் சிக்கியது, நினைத்தால் ஆப்கனை சோவியத் ராணுவம் நொடியில் எரித்திருக்கும் ஆனால் அழிவுகளுக்கு அஞ்சியது, அமெரிக்கா சொல்லிகொடுத்த தந்திரம் அது
இதே தந்திரத்தை, அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.
அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 25 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.
இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி.
இதோ ராஜிவ் கொலை குற்றவாளி 5 புலிகள், 2 தமிழகத்தார் என்பதை 7 தமிழர்கள் என லாவகமாக மறைத்தார்கள் அல்லவா? அப்படியே தான்.
அமைதிபடை காலத்தில் 1500 இந்திய வீரர்கள் செத்தனர், பெரும்பாலும் சீக்கிய சகோதரர்கள், அவர்களுக்கு இலங்கையில் இன்றும் நினைவு மண்டபம் உண்டு, அவர்கள் பெயர் எல்லாம் பொறிக்கபட்டுள்ளன.
மக்களை முன்னிறுத்தி செய்யபடும் இடத்தில் எமது பெருமை மிக ராணுவம் தன் உயிரை இழக்குமே ஒழிய, அப்பாவிகளை கொல்லாது என்பதற்கு பெரும் அடையாளமாக அது உள்ளது, இலங்கை செல்லும் எல்லா இந்திய ராஜதந்திரிகளும் அதனை வணங்க தவறுவதே இல்லை.
நிச்சயம் கண்ணீரால் வணங்கவேண்டிய இடம் அது, இந்த புலிகளால் ஒரு நாளில் லட்சகணக்கான அப்பாவி மக்கள் சாவார்கள் என முன்னறிவித்த இடம் அது, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்
“சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று,
அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.
மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்கது”
ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது.
உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?
ஈழத்தில் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்
“ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை” 
பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.
அமைதிபடை திரும்பியபொழுது வரவேற்கமாட்டேன் என முதலமைச்சராக இருந்த கருணாநிதி சொன்னது அவர் இந்திய இறையாண்மையினை மதிக்காத முதல்வர், பிரிவினைவாத முதல்வர் என்பதை காட்டிற்று
கருணாநிதி அரசு அன்றே டிஸ்மிஸ் செய்யபட்டிருக்க வேண்டும் ஆனால் தேசவிரோத விபி சிங் அதை செய்யவில்லை
புலிகளுக்காக இம்மாநில முதலமைச்சர் இந்திய ராணுவத்தை அப்படி அவமதிக்க கூடாது, அது தண்ட்னைக்குரிய குற்றம்
அந்த குற்றத்தினை பெரும் திமிரோடு செய்தவர் கருணாநிதி
ஆம், இலங்கையில் இந்திய வீரர்களை புலிகள் கொல்ல, அந்த புலிகளுக்கு ஆதரவாக போரட்டமும் இந்திய ராணுவத்தை பழிக்கும் செயல்களுக்கும் புத்தகங்களுக்கும் துனை போனார் கருணாநிதி
அங்கே இந்திய ராணுவத்தினர் புலிகளால் சாக, புலிகளோ தமிழகத்தில் சிகிச்சையெல்லாம் பெற்ற காரியத்தையும் செய்தார் கருணாநிதி
அமைதிபடை வெளியேறிய பின் கருணாநிதி ஆட்சியில் பத்மநாபாவினையும் 14பேரையும் சென்னையிலே புலிகள் சுட்டு கொல்ல வாய்பளித்தார் கருணாநிதி
அந்த தைரியம்தான் பின் ராஜிவினையே கொலை செய்ய புலிகளுக்கு உற்சாகமானது
கருணாநிதி புலிகளோடு கைகோர்த்து செய்த கொடுமையெல்லாம் ரத்த சரித்திர துரோகங்கள்
சந்தேகமில்லை எம்ஜி ராம்சந்தர் புலி அனுதாபி ஆனால் இந்தியாவினை புலிகள் எதிர்த்ததும் அவர்களை கைகழுவினார், ஆனால் கருணாநிதி எங்கு புலிகள் இந்தியாவினை எதிர்த்தார்களோ அப்பொழுதுதான் ஆதரவே வழங்கினார்
அவரின் இந்திய வெறுப்பு அப்படி இருந்தது. அவரின் அந்த துரோகம் ஒரு காலமும் மறக்க கூடியது அல்ல‌‌
1990 இதே தேதியில் 1500 வீரர்ர்களை இழந்து அதன் பின் ஒரு தலைவனையும் இழந்த இந்தியா 2009ல் அமைதி காத்து பழிவாங்கிற்று
அந்த அமைதிபடை திருப்பி அனுப்பட்டபொழுது அதுசாகசம் என ஆர்ர்பரித்த புலிகள், 2009ல் அது மாபெரும் தவறு என உணர்ந்தபொழுது எல்லாம் முடிந்திருந்தது
கொழும்பில் இன்றும் அமைதிபடையாக சென்று உயிர்நீத்த 1500 வீரர்களுக்கு நினைவிடம் உண்டு, அங்கு செல்லும் இந்திய அதிகாரிகள் எல்லாம் அஞ்சலி செலுத்துவார்கள்
ஆனால் அவர்கள் பிணம் வந்த சென்னைக்கும், அவர்கள் கரையேறிய சென்னை கடற்கரையிலும் ஒரு நினைவு சின்னமும் இல்லை
எம்மை பொறுத்தவரை இந்த ஜெயா, ராமசந்திரன் கருணாநிதி சமாதிகளை விட மகா முக்கியமான விஷயம்அந்த வீரர்களுக்கு அதே மெரினாவில் ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும்
முடிந்தால் அந்த கல்லறைகளை அகற்றிவிட்டே அமைக்கலாம் , ஒன்றும் சிக்கல் இல்லை
நாட்டிற்காக உயிர்விட்ட வீரர்களுக்கு நாட்டு சொத்தை அபகரித்த குற்றவாளிகளின்  கல்லறையினை இடித்துவிட்டு நினைவாலயம் அமைப்பது மிக சரியான செயலே தவிர, தவறு ஆகவே ஆகாது.
அதுவே வருங்கால சந்ததிகளுக்கு இந்தியா ஈழத்தில் எடுத்த முயற்சிகளுக்கும், அதில் உயிர்விட்ட இந்தியருக்கும் மாபெரும் சான்றாக அமையும்
தமிழகத்தில் கொலைகாரன் படத்தை பிடித்து திரியும் பதர்களின் முகத்தை கிழித்து வருங்காலத்தில் அவர்களின் வஞ்சக பொய்கள் அழிந்து போகவும் வழி செய்யும்
நிச்சயம் அந்த நினைவாலயம் அமைக்கபட்டு வருடா வருடம் இதே நாளில் வணங்கபட வேண்டும்
ஈழதமிழனுக்கு ஆதவாக சிங்களனை அடக்க சென்ற இந்தியபடை, சிங்களன் பிரபாகரன் கூட்டு சதியால் தமிழனுடனே மோதி துர்பாக்கிய நிலையில் பெரும் பலியுடன் திரும்பி வந்த அந்த வலிமிகுந்த வரலாற்றுக்கு ஒரு நினைவிடம் அமைத்தே தீரவேண்டும்
கருணாநிதி இந்திய ராணுவத்தை அவமானபடுத்திய அந்த துரோக செயலின் களங்கம் தீர ஒரு நினைவிடம் அமைத்தே தீர வேண்டும்
ஊழல் குற்றவாளிக்கும், இந்திய அமைதிபடையினை வரவேற்க மாட்டேன் அந்நிய நாட்டு புலிகள் பக்கம்தான் நிற்பேன் என அடம்பிடித்தவரின் சமாதியும் அங்கு தேவை இல்லை
அங்கு இந்திய அமைதிபடைக்கான நினைவு சின்னமே தேவை, அது ஒரு நாள் அமையும் என நம்புகின்றனர் தேசாபிமானிகள். 
வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்.