வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அடக்குமுறை

எம்.எஸ்.எம் ஐயூப்

வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், தமது சமூக அரசியல் உரிமைகளை அடைவதற்காக கடந்த நான்கு தசாப்தங்களாக, எவ்வளவு அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருப்பார்கள் என்பதை, இப்போதுதான் தெற்கில் வாழும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளார்கள். தம் மீதும் அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையிலேயே, அவர்கள் இந்த உணர்வைப் பெற்று வருகிறார்கள்.