பூபாலசிங்கம்: இது ஒரு பத்திரிக்கைப் பை யனின் கதை

இவர் மறைந்த பொழுது
“பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கி வளம் பல கண்ட சீமான்” என்று அந்நாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தன் இரங்கலுரையில் குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி தனது இரங்கலுரையில் “தோழமை நிறைந்த வாழ்க்கையொன்று முடிந்து விட்டது. அந்தரங்க சுத்தியுடன் பழகிக் கொண்டவர்களுக்கு அவர் அன்பின் ஆழம் தெரியும். அந்த நட்புரிமையை அனுபவித்தவன் என்கிற வகையில் நான் அவரது இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாதவனாக இருக்கின்றேன்.

இங்கு இருக்கும் பொழுது தெரியாது. நான் யாழ்ப்பாணத்துக்கு வந்து 751 பஸ்ஸால் இறங்கி 764க்குப் போவதற்கு முன் புத்தகக் கடைக்குள் எட்டிப் பார்க்கும் பொழுதுதான் அந்த வெற்றிடம் எனக்குப் புலப்படப்போகிறது”
என்ற அவரது உணர்வுபூர்வமான வரிகளுள் ஒரு நட்பின் வலி புலப்படுகின்றது.

வறுமை காரணமாகப் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் 1931ம் ஆண்டில் தனது ஒன்பதாவது வயதில் பிறந்த மண்ணான நயினாதீவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து உறவினர்களின் உதவியால் வ.தம்பித்துரை புத்தகசாலையில் ஒரு ஊழியனாகச் சேர்ந்து பத்திரிகைகளைச் சுமந்து சென்று பஸ்நிலையம், புகையிரதநிலையம், போன்ற சனக்கூட்டம் நிறைந்த இடங்களில் விற்பனை செய்வது இவரது ஆரம்பகால வேலை.

வேலை முடிந்ததும் கடையில்
பத்திரிகை களை விற்பனை செய்வதுடன் அவகாசம் கிடைக்கும்போதெல்லாம் தான் விற்பனை செய்யும் பத்திரிகைகளை வாசித்துஅதன் மூலம் அந்த இளம் வயதிலேயே நாட்டு நடப்புகளை நன்கு தெரிந்துவைத்திருந்தார்.

காலங்கள் உருண்டன
இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி 1935 டிசம்பர் 18ந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கெனவே புரட்சிகர சிந்தனைகளைக் கொண்டிருந்த திரு. பூபாலசிங்கம் அவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியைப் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அறிந்திருந்தார்.

இக்காலத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் வடபுல பிரமுகராகவிருந்த சட்டத்தரணி சிற்றம்பலத்தின் தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியின் பத்திரிகையான சமதர்மம் பத்திரிகைகளையும் அட்வகேற் சிற்றம்பலத் திடமிருந்து பெற்று விற்கத் தொடங்கினார். அப்பத்திரிகை விற்பனையைத் தொழிலாகக் கருதாமல் பணியாகச் செய்தார்.

பதினாறாவது வயதில் – 1938இல் மார்க்சிய சித்தாந்தத்தால் கவரப்பட்டு பின்னர் இருபத்தொரு வயதில் – 1950இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகிக் கட்சியை வடபுலத்தில் ஸ்தாபிப்பது முதல் வடக்கில் அதன் படிப்படியான வளர்ச்சியிலும், நெருக்கடியான காலகட்டங்களில் கட்சியைப் பாதுகாப்பதிலும் மகத்தான பங்களிப்பினை வழங்கியவராக இவர் சக தோழர்களால் விதந்து போற்றப்பட்டுள்ளார்.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தவர்களுள் தோழர் ஆர்.ஆர்.பூபாலசிங்கமும் ஒருவர்
மு.கார்த்திகேசன், எம்.சி.சுப்பிரமணியம், இராமசாமி ஐயர், சு.வே.சீனிவாசகம், நீர்வேலி கந்தையா ஆகிய தோழர்களுடன் தோழர் ஆர்.ஆர்.பூபாலசிங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தாலேயே யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான ஒரு அடித்தளத்தைப் பெறக்கூடியதாக இருந்தது

பூபாலசிங்கமும் மற்றைய தோழர்களும் யாழ்ப்பாணத்தில் கட்சிக் கிளையை ஆரம்பிப்பதற்காகச் செயற்பட்ட காலம் நாட்டில் மார்க்சிசக் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதற்கு ஆட்சியாளர்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட காலப்பகுதியாகும். அப்போது போஸ்டர் களை ஒட்டுதல், கட்சிப் பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற செயற்பாடு களுக்குத் தடையுத்தரவு அமுலில் இருந்தது. தோழர்கள் கார்த்திகேசன், எம்.சி.சுப்பிரமணியம், இராமசாமி ஐயர் ஆகியோருடன் இளைஞராகவிருந்த பூபாலசிங்கம் அவர்களும் போஸ்டர்களை ஒட்டுவதில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டது முண்டு.

பூபாலசிங்கம் அவர்கள் சமசமாஜக் கட்சியின் வாலிபர் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருந்த வேளையில் கட்சியின் பிரச்சார ஏடான சமதர்மம் பத்திரிகையை அரசாங்கம் தடைசெய்திருந்த நிலையிலும் அதன் பிரதிகளை விற்பதை நிறுத்தவில்லை. இக்காலத்தில் ஒருநாள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் பூபாலசிங்கம் சமதர்மம் பத்திரிகை விற்றுக் கொண்டிருப்பதைக் கண்ட ASP சிட்னி டீ சொய்சா அப்பத்திரிகைகளைப் பறிமுதல் செய்ததோடு இவருக்குச் சவுக்கால் அடித்தார். அதன் தழும்பு அவரது மறைவு வரை அவரது உடலில் விழுப்புண்ணாக இருந்துள்ளது.

கட்சிப் பணியுடன் நிற்காமல் சமூக சீர்திருத்த விடயங்களிலும் அவரது பங்களிப்பு அதிகளவில் இருந்தது. நயினாதீவு அபிவிருத்திச்சபை தீவுப்பகுதி மோட்டார்சேவை, அமுதசுரபி அன்னதான சபை, ஆகிய சமூக நலசேவைத் திட்டங்களின் உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு இருந்துள்ளது. தான் சார்ந்த கட்சிசார்பாக தாழ்த்தப்பட்டோரின் இந்து ஆலயப் பிரவேச நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர், நயினாதீவு பிடாரி கோவில் வேள்வியை நிறுத்துவதில் உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் மேற்கொண்டு இறுதியில் வெற்றிகண்டார். நயினாதீவு மணிபல்லவ தேவி பொது நிலைக் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஆர்.ஆர்.பியும் ஒருவர். அக்கழகமே பிற்காலத்தில் அமுதசுரபிஅன்னதான சபையாகியது. இராமேஸ்வர ஆலயத்திற்கு இலங்கையில் உள்ள சொத்துக்களுக்கு அறங்காவலராகவும் இவர் நியமிக்கப் பெற்றிருந்தார்.

பூபாலசிங்கம் அரசியலில் காட்டிய ஈடுபாட்டுக்கு நிகராகவே அவரது ஈழத்துப் புத்தகச் சந்தை ஈடுபாடும் காணப்பட்டது. பத்திரிகை, புத்தகச் சந்தையில் நேரடியாக ஈடுபடும் நோக்கில் தனது 23ஆவது வயதில் 1945ஆம் ஆண்டிலே அவர் பூபாலசிங்கம் புத்தகசாலையை நிறுவினார். அது பின்னாளில் மூன்று தடவை தீக்கிரையானதும், அவரது ஐந்து கடைகள் எரிந்து சாம்பலாகியதும் கசப்பான வரலாறு. யாழ்ப்பாண நூலகம் 1981 ஜுன் 1ம் திகதி எரியூட்டப்பட்ட அன்று அதே அரச கைக்கூலிகளால் பூபாலசிங்கம் புத்தகசாலையும் எரியூட்டப்பட்டதும் வரலாற்று நிகழ்வாயிற்று.

ஒரு தடவை இலவசமாக வாசிக்க வரும் அன்றைய எழுத்தாளர்களை ஏளனமாக நகைத்த தனது ஊழியரிடம்; ‘தம்பியவை அவர்கள் இலக்கியவாதிகள். எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள். நம்பிக்கையானவர்கள், மரியாதைக்குரியவர்கள். அவர்கள் எதை எடுத்து வாசித்தாலும் ஒன்றும் சொல்லாமல் பண்பாக நடந்து கொள்ளுங்கள்’ என்று சொன்னாராம்.

சமூகத்தில் வாசிப்புக் கலாச்சாரத்தை ஏற்படுத்தாது போனால் அச்சமூகத்தினரிடையே புத்தக வியாபாரம் செய்யமுடியுமா? இதை அமரர் பூபாலசிங்கம் தெளிவாகவே புரிந்துகொண்டிருந்தார். வாசிப்பின்பால் ஆர்வத்தை ஏற்படுத்துவதில் அவர் கைக்கொண்ட யுக்தியே இலவச வாசிப்பு வசதி.

வாசிப்பதால் தான் மனிதன் பூரணமடைகிறான் .
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – என்கிறார் விவேகானந்தர்.
திரு பூபாலசிங்கம் அவர்கள்
அவரின் கொள்கையில் இறுதி வரை வாழ்ந்தவர்
நன்றியுடன்
மாணிக்கவாசகர்