அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

கொலை தொடர்பாக 41 குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் நான்கு சந்தேக நபர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் 23 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 சந்தேக நபர்களில், ஒரு சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

இந்த வழக்கு மேல்  நீதிமன்ற நீதிபதிகள் சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ரசாந்த கொடவெல ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டது.