இன்றைய நாள் மிகவும் மோசமானது: கொழும்பு பேராயர்

இன்றைய நாள் மிகவும் மோசமானது எனவும், எமது நாட்டின் போக்கை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்கு சென்றிருந்தபோதே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்திருந்தார். நாட்டை ஆட்சி செய்யும் தலைமைகள் வீடுகளுக்குச் செலவதுடன், நாடு இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.