இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரையில் மொத்தமாக 89 ஆயிரத்து 407 பேர் குணமடைந்துள்ளனர்.

பொரளை  ஐடிஎச் இல் சிகி்ச்சைக்காக அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதென அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை காணப்படுவதுடன் தற்போது இங்கு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 100ஆக குறைந்துள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் குறித்த வைத்தியசாலையின் சகல வார்டுகளும் முழுமையாக தொற்றாளர்களால் நிறைந்திருந்ததாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கொரோனா தடுப்பூசி ஏற்றலுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்றமை, வர்த்தக நிலையங்களுக்குள் கூடியிருந்தமை என்பவற்றைப் பார்க்கையில், கொரோனா 3ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, புத்தாண்டை மிகவும் சுகாதார பாதுகாப்புடன் கொண்டாடுவதற்கான ஆலோசனை​கள் அடங்கிய வழிகாட்டல்களை இன்று வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை கட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், குழுக்களாக இணைந்து விளையாடும் வி​ளையாட்டுக்கள் தவிர்த்து, தனியாக விளையாடும் விளையாட்டுகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.