இலங்கை: கொரனா செய்திகள்

மீண்டும் அதிகரித்தன கொரோனா மரணங்கள். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 22  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 15 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,595 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 06 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பாவே மற்றும் எஸ்வத்தினி போன்ற ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 2021 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தல் மூலம் மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.