இலங்கை: கொரனா செய்திகள்

நான்கு மாவட்டங்களில் உள்ள  06 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன. குறித்த பகுதிகள் நாளை (25) அதிகாலை 04 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இரத்தினபுரி, காலி, கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 06 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 2,959 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 164,201 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 128,607ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 34,384 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.