இலங்கை: கொரனா செய்திகள்

அடுத்த மாதம் 1 ஆம் திகதி நாடு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அவ்வாறு திறக்கப்படும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக முடிவெடுக்க 30 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் இருப்பதாக கூறிய அமைச்சர், நாட்டில் கொரோனா பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.