இலங்கை: கொரனா நிலவரம்

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று(09) காலை 6.00 மணியுடன் விடுவிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டதின் காத்தான்குடி தெற்கு, வடக்கு, மேற்கு, மத்திய கிராம அலுவலர் பிரிவுகளும் மாத்தளை மாவட்டத்தின் இஸ்மான் மாவத்தை, மீதெனிய கிராம அலுவலர் பிரிவு என்பன இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உயர்க்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.