இளைஞனை இழுத்துக்கொண்ட சம்பூர் கடல்

குறித்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை தனது நண்பர்களுடன் இணைந்து சம்பூர் வெளிச்சவீட்டு கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். இதன்போது, எதிர்பாராத விதமாக எழுந்த பாரிய அலையினால் அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.

இளைஞன் நீரில் மூழ்கித் தத்தளிப்பதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். நீண்ட தேடுதலின் பின்னர் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விடுமுறை தினத்தில் இடம்பெற்ற இந்தச் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.