இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இஸ்ரேல் நாடளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, நெசெட் என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்ற சபை நேற்றுடன் கலைக்கப்பட்டது.