ஊடகங்கள் எழுப்பி இருக்க வேண்டிய கேள்விகள்

அமெரிக்காவின சிஐஏ பிரித்தானியாவின் எம்ஐ5, எம்ஐ6 மற்றும் இஸ்ரேல் மொசாட் போன்ற உளவு ஸ்தாபனங்கள் இவ்வளவு அழிவை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி பரவும்வரை என்ன செய்து கொண்டிருந்தன? இவ்வாறான அமைப்புகள் எதிர்காலத்தில் அவசியமா?
ஒரே ஒரு தடவை பயன்படுத்தப்பட்ட அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டஅணுகுண்டுகளுக்கு தொடர்ந்தும் முதலீடு செய்வதா இல்லையேல் முகக்கவசங்களில் முதலீடு செய்வதா?
பொருளாதார வளர்ச்சிக்காக எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கலாம் என அரசுகள் கருதுகின்றன?

இப்படிப் பல முக்கிய கேவிகள் கேட்கப்பட வேண்டிய காலம் இது. ஆனால் ….

தற்போதைய கொரோனா வைரஸ் ஆயிரக் கணக்கில் மக்களைப் பலிகொள்கின்ற இந்தக் கட்டத்தில் கூட, தங்களை நடுநிலை ஊடகங்களாக உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகங்களாகக் காட்டும் மேற்கு நாட்டு ஊடகங்கள் தங்களுடைய அரசாங்கங்களை நோக்கி முக்கியமான கேள்விகளை எழுப்ப மறுத்துவருகின்றன. மாறாக கொரோனாவால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பிரசுரிப்பதும் அரசுகளின் அறிவித்தல்களை வெளியிடுவதிலுமே உள்ளன. மேலும் வீழ்ந்து போன பொருளாதாரத்தை எழுப்ப வேண்டும் என்ற அக்கறையைத் தான் இந்த ஊடகங்களும் வெளியிடுகின்றன.