எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை

அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், 6 ஆவது மாடியில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

எஸ்.பி.பி.க்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசத்தின் அளவும் குறைக்கப்பட்டது. எஸ்.பி.பி.க்கு அளிக்கப்படும் சிசிச்சைகள் நல்ல பலனைத் தருவதாக மருத்துவர்களும் கூறினர்.

சிகிச்சையின் ஒரு பகுதியாக, எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் ஒலிக்க விடப்படுகின்றன. எஸ்.பி.பி. இசைப்பிரியர் என்பதால் பாடல்களை ஒலிக்க செய்யும் முறை, நல்ல பலனைத் தரும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.