கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம் : மூவ​ர் கைது

திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் அந்தப் படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவரென மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனர்த்தம் நேற்று(23) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.