கின்னஸில் இடம்பிடித்த ‘Dubai Frame’

அந்த வரிசையில் தற்போது ‘புகைப்பட்ட சட்டம்’ வடிவிலான உலகின் மிகப்பெரிய கட்டடம் அங்கு திறக்கப்பட்டுள்ளது. டுபாய் நகரின் ஜபீல் பூங்கா அருகே இந்த பிரம்மாண்ட கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பிரம்மாண்டமான புகைப்பட சட்டம் போன்று உள்ளதால், இதனை ‘துபாய் ஃப்ரேம்’ என்று அழைக்கின்றனர்.

இந்த புகைப்பட சட்டம் வடிவிலான கட்டடம் 150.24 மீற்றர் உயரமும், 95.23 மீற்றர் அகலமும் கொண்டதாக இருக்கிறது. இரு உயரமான தூண்களில் இடைவெளியுடன் இந்த ஃப்ரேம் வடிவிலான கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், அச்சு அசலாக புகைப்பட சட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், முப்பரிமாண தோற்றத்துடன் இது காணப்படுகிறது. இந்த கட்டடத்தில் 150 மீற்றர் உயரத்தில் துபாய் நகரின் அழகை கண்டு இரசிப்பதற்கான மாடம் ஒன்று உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேர் வரை இந்த மாடத்தில் இருந்து பழைய மற்றும் புதிய டுபாய் நகரின் அழகை கண்டு இரசிக்கலாம்.

டுபாய் ஃப்ரேம் கட்டடத்தில் செல்வதற்கு பெரியவர்களுக்கு 50 திர்ஹாம்( ரூ.950), சிறியவர்களுக்கு 20 திர்ஹாம் (ரூ.380) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதை தாண்டிய முதியவர்களுக்கு கட்டணம் இல்லை. லிஃப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

புர்ஜ் காலீபா, ஜேடபிள்யூ மேரியாட்ஸ் ஓட்டல் வரிசையில் இந்த புகைப்பட சட்டம் வடிவிலான கட்டடமும் துபாய் நகரின் புதிய அடையாளச் சின்னமாக மாறி இருக்கிறது. துபாய் செல்பவர்கள் நிச்சயம் பார்வையிட வேண்டிய சுற்றுலாத் தலமாக கூறலாம்.

அடுத்த ஆண்டு துபாயில் சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெற இருக்கும் நிலையில், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பார்வையாளர்களை கவர்வதற்காக பல்வேறு புதுமையான விடயங்களையும், பிரம்மாண்ட கட்டங்களையும் துபாய் நிர்வாகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.